
சுடச் சுடச் செய்திகளை தருகின்றோம் என்று கூறிகொண்டு கொடுப்பது எல்லாம் பொய்யான செய்திகள் என மூத்த ஊடகவியலாளர் ஜெ.ஜெயராஜ் தெரிவித்துள்ளர்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு செயலமர்வில், வளவாளராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உண்மையை தேடுவதும், உண்மையை கண்டுபிடிப்பது என்பதும் பாரிய சவால். சுடச் சுட செய்திகளை வழங்க வேண்டும் என்பதற்காக உண்மையை அரைகுறையாக தெரிந்து கொண்டு முழுமை இல்லாத செய்திகளை நாம் வழங்குகின்றோம்.
அதன்பின்னர் நாம் தான் சிறந்த ஊடகம் என்று மார்பு தட்டிக் கொள்கின்றோம். ஆனால், உண்மையில் அது தவறு.
தெளிவான, முழுமையான செய்திகளை நாம் வழங்க வேண்டும். கருத்து சுதந்திரம் எமக்கு இருக்கிறது. அரசியல் அமைப்பின் 14ஆவது சரத்தின் முதலாவது அத்தியாயத்தில் அது வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், அதை நாம் ஒரு வரையறையின் உள்ளே மட்டுமே பயன்படுத்த முடியும். கிடைத்திருக்கின்றது என்பதற்காக நாம் அதனை எல்லை மீறி பயன்படுவதற்கும், வெளிப்படுத்துவதற்கும் நிற்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.