
மன்னார் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயணித்த படகுகள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது, நிபந்தனைகளுடன் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
யாழில் மலேரியா பரவக்கூடிய சாத்தியக்கூறு! ஆ.கேதீஸ்வரன் எச்சரிக்கை