நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவான் வந்த பயணிகள் நடுக்கடலில் தவிப்பு!

நெடுந்தீவிலிருந்து 100இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றியவாறு பயணித்த, படகு இடைநடுவில் சுக்கான் உடைந்தமையால் அந்தரித்தபோது வட தாரகை மூலம் மீட்டு வரப்பட்டனர்.

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வட தாரகைப் படகு பழுதடைந்துள்ளது.

குமுதினிப் படகு பழுதடைந்த நிலமையில் உள்ளது. இதனால் இன்று காலை 8 மணியளவில் நெடுந்தீவில் இருந்து சமுத்திரதேவா படகு புறப்பட்டது.

இவ்வாறு புறப்பட்ட படகின் சுக்கான் உடைந்தமையால் நடுக்கடலில் தத்தளித்த படகை திருத்தத்திற்காக கொண்டு செல்லப்பட்ட நெடுந்தாரகை கட்டி இழுத்துச் சென்று கரையை அண்மித்த பகுதியில் பயணிகள் நெடுந்தாரகைக்கு மாற்றப்பட்டே குறிகட்டுவானை அடைந்தனர்.

இதனால் நெடுந்தீவிற்கான போக்குவரத்தில் ஈடுபட்ட 3ஆவது படகும் பழுதடைந்த நிலையில், ஒரேயொரு படகு மட்டும் எஞ்சியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது! பசில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *