
மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதார பணியாளர்களை கருத்திற்கொண்டு மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவான 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைக்கு சொந்தமாக உள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரும் விடயத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாட்டில் தற்போது உள்ள சுகாதார அமைப்பை வலுப்படுத்த வேண்டும். நாட்டின் எதிர்காலத்திற்கு இது சாதகமாக அமையும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அபிவிருத்தி என்ற போர்வையில் ஏற்கனவே வடக்கு, கிழக்கில் மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளை கையேற்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவான் வந்த பயணிகள் நடுக்கடலில் தவிப்பு!