தெஹிவளையில் ஒருவரின் உயிரைக் காவுகொண்ட முதலை வெள்ளவத்தையில் உள்ள கால்வாயில் – மக்களே அவதானம்!

தெஹிவளை கடற்பரப்பில் ஒருவரின் உயிரைக் காவுகொண்டதாக சந்தேகிக்கப்படும் முதலை, இன்று (புதன்கிழமை) காலை வெள்ளவத்தையில் உள்ள கால்வாயில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் பலரின் உதவியுடன் முதலையை உடனடியாக கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

14 அடி நீளமுள்ள முதலை அப்பகுதியில் சுற்றித் திரிவதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, கல்கிசை மற்றும் தெஹிவளை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *