அரசை விமர்சிக்கும் மேலும் இரு அமைச்சர்களை பதவி நீக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தகவல்!

அரசை கடுமையாக விமர்சிக்கும் மேலும் இரு இராஜாங்க அமைச்சர்களையும் பதவி நீக்குவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஆராய்ந்து வருகிறார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் குறித்து தென் ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களைப் பதவி நீக்குவதன் மூலம் ஏற்படும் அரசியல் பின்னடைவு நிலை பற்றியும் ஜனாதிபதியால் கவனம் செலுத்தப்படுவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளிலும் மாற்றம் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இதன்போதே இரு இராஜாங்க அமைச்சர்கள் பதவி நீக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில், குறித்த பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *