
மிரிஹான – ஜூபிலி கட்டை பகுதியில் உள்ள உள்ளூர் பால் மா விற்பனை நிலையத்திற்கு முன்பாக மீண்டும் நீண்ட வரிசையில் மக்கள் கூடியுள்ளனர்.
குறித்த கடையின் முன் மக்கள் வரிசையில் நிற்பதைத் தடுக்கும் வகையில் டோக்கன் முறையில் வழங்குமாறு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், பால்மா தட்டுப்பாடு காரணமாக மக்கள் மீண்டும் வரிசையில் நிற்க ஆரம்பித்துள்ளமை தெரியவந்துள்ளது.