டுபாயில் நெற்பயிர்ச்செய்கை செய்யாவிட்டாலும் இருக்குமிடத்திலிருந்து உணவுகளை பெறலாம்! விவசாயத்துறை அமைச்சர்

டுபாய் போன்ற நாடுகளில் நெற்பயிர்ச்செய்கை செய்யாவிட்டாலும் அங்கு இருக்குமிடத்திலிருந்து உணவுகளைபெற்றுக்கொள்ள முடியுமென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளாா்.

கொழும்புஇ,வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிபிட்டுள்ளாா்.

மேலும், உணவுத் தடுப்பாடு ஏற்படுமாக இருந்தால் இருக்குமிடத்திலிருந்து உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் செயன்முறையையே உலக நாடுகள் முன்னெடுப்பதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் உணவுத் தடுப்பாடு ஏற்படக்கூடுமென அநேகமானவர்கள் தமது நிலைப்பாட்டை வெளியிட்டு வருகின்றனர்.

டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகள் நெற்பயிர்ச்செய்கையை முன்னெடுக்காவிட்டாலும் அந்த நாடுகளிலுள்ள மக்களுக்கு பஞ்சம் ஏற்படபோவதில்லை.

அதனையும் மீறி உணவுத் தடுப்பாடு ஏற்படுமாக இருந்தால், உணவுப் பொருட்கள் அதிகமாக இருக்குமிடத்திலிருந்து அவற்றை பெற்றுக்கொள்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *