
அன்று என் ஆட்சியை வீணடித்த ரணில் ஒரு துரோகி என முன்னாள் ஜனாதிபதி மைதிரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்றால் அமைச்சர்களை மாற்றுவது சிறப்பாக அமையும் என தெரிவித்துள்ளார்.
சுசில் பிரேமஜயந்த கடந்த சனிக்கிழமை ஊடக சந்திப்பில் ஈடுபட்ட போது,இந்த அரசாங்கம் எவ்வாறு என கேட்டுள்ளனர். அவர் அதற்கு பதில் ஒன்றை கூறிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் 24 மணிநேரத்திற்குள் சுசிலை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர்.
2022ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக மாற அமைச்சர்களை நீக்கி, மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் எனில் பிரச்சினைகள் நிவர்த்தியாகும்.
ஆனால் இங்கு விவசாயிகள் உரமின்றி மிகவும் இன்னல்களுக்கு உற்பட்டுள்ளனர். ஆங்கிலேய ஆட்சியின் போதும் விவசாயிகளிற்கு இப்படி ஒரு இன்னல் வரவில்லை.
இன்று எரிவாயு வெடிப்புகளிற்கு எந்த ஒரு தீர்வும் எடுக்கவில்லை.
அதேபோல எரிவாயுவில் ஏற்பட்ட இரசாயன கலவை பிழை என தெரிந்தும் அதற்கு உரித்தான பொறியியலாளர்களிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே தற்போது மதகுருமார்களே, பெற்றோர்களே, பிள்ளைகளே சுதந்திர கட்சி தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது,நாட்டில் ஏற்பட்டுள்ளது இச்சிக்கல்களை தீர்ப்பதற்கு.
ஆனால் இவர்கள் கூறுவது சுதந்திர கட்சி வீழ்ச்சி அடைந்துள்ளது என்று. நாங்கள் வீழவில்லை அன்று பண்டாரநாயக்க அம்மையார் அவர்கள் கட்டியெழுப்பிய கட்சி இவ் கட்சி.
என்னுடைய ஆட்சியின் போது சீன நாட்டில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் மாத்திரம் இறக்குமதி செய்யவோம் என தீர்மானித்தோம்.
ஆனால் அன்று ரணில் விக்கிரமசிங்க நான் கூறுவதை விட்டுவிட்டு அவர்கள் சில தீர்வுகளை சுயமாக எடுத்தனர்.
அன்று என் ஆட்சியை வீணடித்தனர். தனிமைக்குட்பட்டேன். அப்போது என்னுடய கட்சியில் உள்ளவர்கள் கூட எனக்கு உதவ முன்வரவில்லை.
இந்நாட்டில் துஷ்பிரயோகம், மது ஆகியவற்றை நிவர்த்தி செய்ய முடியாது அவ்வாறு செய்ய முற்பட்டால் அவர்களை தனிமையில் தள்ளப்படுகின்றனர்.
எனவே நம் நாட்டிற்கு இப்போது முக்கியமாக தேவைபடுவது வஞ்சகமற்ற அரசாங்கம் ஒன்று என தெரிவித்துள்ளார்.