கொரோனா மரணம் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!

இலங்கையில் மேலும் 118 கொரோனா வைரஸ் தொற்றால் மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 30க்கும் 59க்கும் இடைப்பட்ட வயதுடைய 15 ஆண்களும் 2 பெண்களுமாக 17 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 64 ஆண்களும் 37 பெண்களுமாக 101 பேரும் மரணித்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 340ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் நாளொன்றில் பதிவான அதிக கொரோனா வைரஸ் மரணங்கள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *