
பாண்டிருப்பு கடற்கரையில் வெள்ள நீர் வெட்டிவிடப்பட்டது!
தொடர்ச்சியான மழை காரணமாக ஊர் வெள்ளம் பாண்டிருப்பு மயானத்தில் கடலுக்குள் வடிந்தோடாது தேங்கி நின்றது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான புவனேஸ்வரி விநாயகமூர்த்தி ,பொன் செல்வநாயகம் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் நேரடியாக நிற்க மாநகரசபை JCB வாகனத்தின் உதவியுடன் வெள்ள நீர் கடலுக்குள் வெட்டி விடப்பட்டது.