புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று முந்தல் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
Help Age International அமைப்பு இதற்கான அணுசரணையை வழங்கியதுடன், முந்தல் பிரதேச செயலகத்தின் சமூக சேவை பிரிவு ஊடாக குறித்த பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
முந்தல் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ஐ.பி.தேசானி ஹசன்திகா பத்திரனவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் Help age international அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக, முந்தல் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்தக் கிராம சேவகர் ஊடாக தெரிவுசெய்யப்பட்டனர்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதற்கட்டமாக 100 பேருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.