மஸ்கெலியாவில் சமுர்த்தி வங்கியொன்றை அமைக்குமாறு சபை உறுப்பினர் ராஜ் அசோக் வலியுறுத்து

மஸ்கெலியாவில் சமுர்த்தி வங்கியொன்று இல்லாதமையால் சமுர்த்தி பயனாளிகள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஆகவே, மஸ்கெலியாவில் சமுர்த்தி வங்கியொன்று அமைக்கப்படுவதே இதற்கு தீர்வாகுமென மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை நடைபெற்ற மஸ்கெலியா பிரதேச சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சமுர்த்தி அமைச்சு நேரடியாக நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் அது பிரதமரின் கீழ் இருப்பதால் குறைந்த வருமானம் பெரும் எமது மக்களுக்கு சமுர்த்தி வேலைத்திட்டங்கள் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

22 கிராமசேவகர் பிரிவுகளை சேர்ந்த இரண்டு பிரதேசசபைக்கு ஒரு வங்கி மாத்திரம் இருப்பதும்
மஸ்கெலியா பகுதியை சேர்ந்த ராஜமலை, மரே, ஹப்புகஸ்த்தன, கார்ட்மோர் மற்றும் சாமிமலை தோட்டபுற மக்கள் ஆர்வம் இருந்தும் சுமார் 30km தூரம் நோர்வுட் செல்லவிருப்பதால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மஸ்கெலியாவில் மஸ்கெலியா நகரம், மஸ்கெலியா தோட்டம், நல்லத்தண்ணி மற்றும் ரிக்காடன் போன்ற பிரதேசங்கள் வங்கிக்கு நோர்ட்டன் செல்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் இல்லை.

மஸ்கெலியா நகரம் மஸ்கெலியா தோட்டம் இரண்டையும் இணைத்திருபதன் காரணமாக மஸ்கெலியா தோட்டம் அதிகமாக பாதிக்கப்படுகின்றது.

காரணம் நகரம் தானே வருமானம் குறைந்தவர்களாக இருக்கமாட்டார்களென கூப்பன் முத்திரைகள் கூட மஸ்கெலியா தோட்ட மக்களுக்கு கிடைப்பதில்லை. இந்த விடயத்தில் அதிகூடிய கரிசனை செலுத்தப்பட வேண்டும்.

சுமார் 62,000 மக்கள் வாழும் மஸ்கெலியா பிரதேசத்தில் கட்டாயம் ஒரு சமுர்த்தி வங்கி வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் மஸ்கெலியா சபைக்கு கீழ் 11 கிராமசேவகர் பிரிவில் 6 வட்டாரதிக்கு மாத்திரம் சமுர்த்தி உத்தியோகத்தர் காணப்படுகின்றனர்.

மற்ற 5 பிரிவுக்கும் பதில் உத்தியோகத்தர் காணப்படுகின்றனர். இந்த குறை தீர்க்கப்பட வேண்டும்.

வெளி பிரதேச உத்தியோகத்தர்களை மஸ்கெலியாவிக்கு அனுப்பாமல் மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு சமுர்த்தி நியமனம் வழங்கினால் இலகுவாக மக்களுக்கு வேலை செய்வார்கள்.

மஸ்கெலியாவில் உள்ள சில பிரதேச மக்கள் 30 கி.மீ. வரை செல்ல வேண்டியுள்ளது. இது இந்த விதத்திலும் நியாயம் இல்லை.

பிரதமரின் கீழ் இந்த அமைச்சு காணப்படுவதால் எதிர்காலத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் நடைபெறுமென மக்கள் எதிர்பாப்பதால் மஸ்கெலியாவில் சமுர்த்தி வங்கியொன்று அவசியமாகும்.

மஸ்கெலியா நகரம், மஸ்கெலியா தோட்டம், நல்லத்தண்ணி நகரம் மற்றும் ரிக்காடன் தோட்ட மக்களை நோர்ட்டன் வங்கிக்கு அனுப்பாமல் மஸ்கெலியாவிக்கே சேர்க்கப்பட வேண்டும். சமுர்த்தி உத்தியோகத்தர் பற்றாக்குறையும் தீர்க்க வேண்டும் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *