திருமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதை கண்டித்து கிழக்கு மக்கள் குரல் அமைப்பினால் திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்னால் இன்று(5) மாலை 3.15 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பியிருந்ததுடன் நாட்டின் முக்கிய அரசியல் வாதிகளின் உருவத்தை ஒத்த முகமூடிகளை அணிந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *