
புத்தளம் நகர சபையின் முன்னாள் நகர பிதா மர்ஹூம் கே.ஏ.பாயிஸின் ஞாபகார்த்த ஒன்கூடல் இன்று மாலை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீ வெங்கட சுந்தரராமக் குருக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் உட்பட உலமாக்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சமயத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் புத்தளம் முன்னாள் நகர பிதா மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் புத்தளம் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் பற்றி ஞாபகார்த்த உரைகளை நிகழ்த்தினார்கள்.
அத்துடன் மர்ஹூம் கே.ஏ.பாயிஸை கௌரவிக்கும் வகையில், அவரது புதல்வரான அஷ்ரப் பராஜ் பாயிஸ் சினைவுச் சின்னம் வழங்கி, பொன்னாடை போர்த்தி புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் கௌரவித்தார்.
அத்தோடு, புத்தளம் நகர சபையின் முன்னாள் நகர பிதாவுக்காக விஷேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றதுடன் , அவர் ஆற்றிய சேவைகள் பற்றிய காணோளி தொகுப்பும் மல்டி மீடியா மூலம் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
