
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வல்வெட்டித்துறையை சேர்ந்த இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நாகபட்டினம் கடற்பகுதியில் வைத்து கடந்த ஒக்டோபர் மாத இறுதி பகுதியில் இலங்கையைச் சேர்ந்த இரு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
யாழ். வடமராட்சி – வல்வெட்டித்துறை சேர்ந்த இரு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த இருவரையும் விடுவிப்பதாக சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட படகுடன் மீனவர்கள் இருவரையும் விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரக அதிகாரிகளிடம் இருவரும் கையளிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட இருவரையும் இந்திய கடற்படையனர் ஊடாக இலங்கை கடற்படையிடம் கையளிக்க உரிய ஏற்பாடுகளை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரக அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.