
சம்பூரில் இன்று புதன்கிழமை மாலை கோப்பிரஸ் விற்பனை நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இவ் கோப்பிரஸ் விற்பனை நிலையமானது மூதூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின்கீழ் இயங்கவுள்ளது.
அரசாங்கத்தின் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின்கீழ் நாடளாவிய ரீதியில் 5000 கோப்பிரஸ் விற்பனை நிலையங்களை திறந்து வைக்கும் திட்டத்தின்கீழ் இவ் கோப்பிரஸ் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இதனை கிழக்கு மாகாண ஆளுநர் அநூராத யஹம்பத், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்து கொண்டு திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது .