நண்பன் இறந்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை….!

தமிழகத்தில், நண்பன் உயிரிழந்த துக்கத்தில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமாநகர் பகுதியை சேர்ந்த பாசூரான் மகன் மில்டன்.

17 வயது மதிக்கத்தக்க இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடன் 11-ஆம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து வந்த அரக்கோணம் அருகே புளியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நண்பன் உதயகுமார்(17).கடந்த மாதம் 5-ஆம் திகதி உயிரிழந்துவிட்டார்.

இதனால் அன்றைய நாள் முதல் நண்பன் இறந்த வருத்தத்தில் மில்டன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நண்பனின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதையடுத்து பெற்றோர்கள் மில்டனை சமரசம் செய்து வந்தனர். இந்த நிலையில் நாள்தோறும் அதையே நினைத்து விரக்தியில் இருந்து வந்த மில்டன்,

தனது நண்பன் இறந்து போன 5-ஆம் திகதி அன்றே தானும் இறக்க முடிவு செய்து புதன்கிழமை அதிகாலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனே மில்டனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவவமனைக்கு கொண்டு சென்று சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *