நிவாரணப் பொதியை வழங்க எவ்வாறு நிதி பெறப்பட்டது? அநுரகுமார

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு உட்பட ஏனைய சலுகைகளை வழங்குவதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ந எவ்வாறு நிதியைப் பெற்றார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளது.

அரசாங்கம் தொடர்ந்தும் பணத்தை அச்சடித்தால் எதிர்காலத்தில் மேலும் பல பிரச்சினைகள் ஏற்படும். தற்போது நாடு மூன்று முக்கிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் அரசாங்கம் எவ்வாறு நிதியைப் பெற்றது என்பதை அறிய நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு.

தற்போதைய நிர்வாகம் பெருந்தொகையான பணத்தை அச்சிட்டுள்ளதுடன், இது நாளாந்தம் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவை நீக்கியமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் விவசாய அமைச்சின் செயலாளரும் தெரிவித்த கருத்துக்களால் ஜனாதிபதி திடுக்கிட்டுள்ளார்.

இது ஒரு சர்வாதிகாரியின் குணாதிசயங்கள் அல்ல, பயந்த ஒருவரின் குணாதிசயங்கள்.

தற்போதைய நிர்வாகம் தமக்கு நன்மை பயக்கும் நபர்களை பாதுகாக்கும்.

முன்னாள் ஜனாதிபதிக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. தற்போதைய நிர்வாகத்தை பாதிக்கக்கூடிய அறிவு அவருக்கு உள்ளது.

அவர் நாடாளுமன்ற ஆசனத்தை தவிர வேறு எதையும் இழக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் பணிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *