பால்மாவுக்கு இந்த மாத இறுதி வரை தட்டுப்பாடு!

பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார்.

பால்மா ஏற்றிய கப்பல்கள் இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ வர இருக்கின்றது.

அத்துடன், டொலர் தட்டுப்பாடு காரணமாகவே, கடந்த 31 ஆம் திகதி முதல் பால்மா விலையினை அதிகரிப்பதற்கு அதன் இறக்குமதியாளர்கள் தீர்மானித்தனர்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாயிலும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாயிலும் அதிகரிக்கப்பட்டன என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *