திருமலை எண்ணெய் தாங்கி வளாக ஒப்பந்தம்: நீதிமன்றத்தை நாடவுள்ள தேரர்!

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகம் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை நாட்டுக்கு பாதகமானது. எனவே பல தரப்புக்கள் நீதிமன்ற தலையீட்டை நாடுவதற்கு தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு அச்சுறுத்தல். ஒப்பந்தத்தை ரத்து செய்ய நீதிமன்றத்தின் தலையீட்டை நாடுவதற்கு மட்டுமே தங்களுக்கு விருப்பம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகம் தொடர்பான உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதால், ஒரு வாரத்திற்குள் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என நம்புவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில், வளாகத்தில் உள்ள பல எண்ணெய் தாங்கிகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிட புதிய நிறுவனம் நிறுவப்படும், அதே நேரத்தில் லங்கா இந்தியன் ஓயில் நிறுவனம் பல எண்ணெய் தாங்கிகளை நீண்ட கால அடிப்படையில் இயக்க அனுமதிக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகளின் ஊடாக ஒமிக்ரான் பரவுவதை தடுக்க நடவடிக்கை! பிரசன்ன ரணதுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *