
தேயிலை தோட்டங்களில் உள்ள மக்களுக்கும் நிவாரணம் வழங்குங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மலையக மக்களுக்கு கோதுமை மா மானியம் வழங்க உள்ளனர்.அது நல்ல விடயம்தான். அரச ஊழியர் 5000 ரூபா வழங்க உள்ளனர் அதுவும் நல்ல விடயம்தான்.
ஆனால் தேயிலை தோட்டங்களில் உள்ள மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்போகின்றீர்கள்.
ஏன் அவர்களை மறந்து விட்டீர்கள்.அவர்களுக்கும் ரூ 5000 வழங்குங்கள்
பிள்ளைகளிற்கு குடிக்க பால் இல்லை .அங்கு எரிவாயு வெடிக்கிறது.உங்களால் ஆட்சியை சிறப்புற செய்ய முடியாது எனில் வேறு ஒருவரிடம் ஆட்சி வழங்குங்கள் என்றார்.