சுசில் பிரேமஜயந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அங்கத்துவம் கேள்விக்குறியானது?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அங்கத்துவம் கேள்விக்குறியாகியுள்ளது.

சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கட்சிக்குள் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமா இல்லையா என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவே கூடி தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தன்னால் சொந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *