
ஹொரவபொத்தானை- நிக்கவெவ பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று இன்று (06) காலை மீட்கப்பட்டது.
55 வயதுக்கும் 60 வயதுக்கு இடைப்பட்ட பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவ இடத்திற்கு குறித்த பெண்ணின் சடலத்தை பார்வையிடுவதற்கு நீதவான் வருகை தந்திருந்துள்ளார்.
இருந்த போதிலும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.