ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீது விவாதம்!

<!–

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீது விவாதம்! – Athavan News

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் இரு நாட்கள் விவாதம் கோருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

அதன்பின்னர் அது தொடர்பில் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என சபாநாயகரிடம், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *