திருமலையில் மழை வெள்ளத்தால் தடைப்பட்ட தரைவழிப்போக்குவரத்து

திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லடி வெட்டுவான் கிராமத்துக்கான தரைவழிப்போக்குவரத்து மழை வெள்ளத்தினால் தடைப்பட்டுள்ளது.

இதனால் இப்பாலத்தின் ஊடாகப் போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமங்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்

கிண்ணியா – மகாமார் ஊடாகச் செல்லும் கல்லடி வெட்டுவான் பாலமே இவ்வாறு மூழ்கியுள்ளது

இதனால் பாடசாலை மாணவர்கள் வியாபாரிகள், விவசாயிகள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இப்பாலத்தைக் கடப்பதற்கு சாதாரண தோணி பயன்படுத்தப்பட்டு வருகின்றன

தோணி மூலம், மோட்டார் சைக்கிள் முதலான வாகனங்களை ஏற்ற முடியாததனால் அவற்றை தோளில் சுமந்தும் மறுகரையை அடைய வேண்டியுள்ளது

தீனேரி, கல்லம்பற்றை, கல்லறப்பு முதலான இடங்களிலிருந்து பெருக்கெடுக்கும் வெள்ள நீர், இப்பாலம் நீரில் மூழ்குவதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது

இப்பாலத்தை உரிய அதிகாரிகள் புனரமைப்புச் செய்து தருமாறு மக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *