
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று வியாழக்கிழமை (06) மாலை மூதூர் பிரதேச கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது நாட்டில் மக்கள் அத்தியவசிய பொருட்களின் விலைவாசியினால் எதிர் நோக்கும் பிரச்சினைகள் ,நாட்டு நிலமைகள் தொடர்பில் மக்களுக்கு எவ்வாறான தெளிவூட்டல்களை வழங்குதல், கட்சியின் செயற்பாடுகளை மூதூரில் முன்னெடுப்பதற்காக செய்ய வேண்டிய அனுகுமுறைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இக்கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமசந்திரா, மூதூர் பிரதேச அமைப்பாளர் எம்.சப்றான் மற்றும் மூதூர் பிரதேச மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

