உரிமைப் போராட்டத்தை உலகறிய செய்தவர்கள் ஊடகவியலாளர்கள்! பிரதேச செயலாளர் கமலதாசன்

  • ஊடகவியல்துறை என்பது மிகப் பெரியதுறை நாங்கள் சிறுவயதில் பல்வேறு புத்தகங்களை படிக்கின்ற போது நாடுகளின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் பிரதானமாக ஊடகவியலாளர்கள். ஊடகவியல் எவ்வாறு தோற்றம் பெற்றது என்றால் மன்னனுக்கும் மக்களுக்குமான ஒரு செய்தியை பரிமாறுகின்றவராகவும் அதேபோன்று நாட்டிற்கு நாடு செய்தியை பரிமாறுபவராகவும் ஊடகவியலாளர்கள் இருந்திருக்கின்றார்கள் .

பல்வேறு உரிமை போராட்டங்களில் பங்குகொண்டு அந்த உரிமைப் போராட்டங்களை உலகிற்குக் கொண்டு வந்தவர்கள் ஊடகவியலாளர்களாக இருக்கின்றார்கள் .

இவ்வாறு நேற்று (06) வவுனியா வைரவப்புளியங்குளத்தில் இடம்பெற்ற வவுனியா ஊடக அமைய அலுவலக திறப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா பிரதேச செயலாளர் நா . தெரிவித்துள்ளார்.

அவர்கள் அங்கு மேலும் உரையாற்றியபோது,

பல்வேறு படுகொலைகள் அவ்வாறான துயரச்சம்பவங்கள் , நடைபெறுகின்ற போது அதை முழு உலகிற்கும் தெரியப்படுத்தி அந்த மக்களுக்கு நீதி கிடைக்கின்ற பாரிய பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள் ஊடகவியலாளர்கள்.

தற்போது இந்த ஊடக அமையத்தில் இருக்கின்ற ஊடகவியலாளர்களும் எதிர்காலத்தில் பல்வேறு பயிற்சிகளையும் மேற்கொண்டு தேசியளவில் அல்லது சர்வதேச அளவில் பல மொழிகளில் பிரபல்யமடைந்து ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதுகின்ற ஒரு விற்பன்னர்களாகவும் அவர்கள் உலகம் அறிந்துகொள்ள வளர்ந்து தங்களது வயதுடன் சேர்த்து அனுபவங்களையும் பெற்று மேலும் வளப்படுத்திக்கொண்டு இந்த நாட்டிற்கும், வன்னி மண்ணிற்கும் சேவையாற்ற முன்வரவேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *