இத்தாலியில் இருந்து வருகை தந்த பயணிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

இத்தாலியில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்த பயணிகள் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

போர்த்துக்கலை சேர்ந்த இரோ அட்லான்டிக் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் 179 பயணிகள் அமிர்தசரஸ் வந்திருந்தனர்.

இவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்போதே 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *