அரசாங்கம் சர்வதேச கொள்கைகள் இல்லாது செயற்படுகின்றது – ராஜித

அரசாங்கம் தற்போது சர்வதேச கொள்கைகள் இல்லாது செயற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பில்  நேற்று (வியாழக்கிழமை)  கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ”இவர்களிடம் சர்வதேச கொள்கையும் இல்லை, அவர்களுக்கென்று ஒரு தனியான  கொள்கையும் இல்லை.

அரசாங்கம் சீனாவின் பின்னால் செல்லும் போது ஏனைய அரசியல் தரப்பினர் மகிழ்ச்சியாக இல்லை.

அவர்களை திருப்திப்படுத்தவே சில செயற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது.

தற்போது இலங்கை கடற்படையினர் ஜப்பானுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜப்பான் , இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஒரே கொள்கையில் செயற்படுகின்றனர்.

ஆனால் சீனா வேறுக் கொள்கையில் உள்ளவர்கள். எனவே அரசாங்கம் உண்மையில் இரு தரப்பையும் சமநிலைப்படுத்த முயற்சிக்கின்றது” தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *