செத்தாலும் பரவாயில்லை யாழ்ப்பாணத்தை முடக்கி போராடுவோம் – மீனவர்கள் எச்சரிக்கை

யாழ்ப்பாண கடல் பரப்புகளில் இந்திய மீன்வர்களின் வருகையை தடுத்து நிறுத்துமாறு கோரி சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் மாதகல் கடல் தொழிலாளர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது வீதி மறியல் போராட்டத்திலும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் ஜனாதிபதிக்கு கோரிக்கைளை அனுப்பி வைக்கும் வகையில்,பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்:

நாம் 3 கோரிக்கைளை பிரதானமாக முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

1.2500 இந்திய இழுவை மடி படகுகளை தடை செய்ய வேண்டும்.

2.இந்திய அரசு இலங்கை மீனவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்.

3.எமது கடல் வளத்தை இந்திய மீனவர்கள் அழிகின்றனர்.அதனை பாதுகாக்கவேண்டும்.

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டு படகுகளை ஒழுங்கு படுத்தும் சட்டங்களை அதிகாரிகள் நடைமுறைபடுத்த வேண்டும்.அதை விடுத்து போராடினால் கைது செய்வோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தை மீறும் இந்திய மீனவர்களை கைது செய்வதை விட்டு விட்டு எம்மை கைது செய்வோம் என மிரட்டுகிறார்கள்.நேற்றும் கூட மருதங்கேணி கடல் பரப்பில் இறால் பிடிப்பதற்காக இந்திய படகுகள் வந்திருந்தன.இது பற்றி யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.நாம் எமது வளங்கள் அழிக்கப்பட்டு இப்போதே செத்து கொண்டு இருக்கின்றோம்.எங்களை சிறையிலே போடுங்கள் நிம்மதியாக சாகின்றோம்.இல்லையென்றால் நஞ்சை வாங்கி தாருங்கள் குடித்து விட்டு செத்து போகின்றோம்.எமக்கு இந்த பிரச்சனைக்கு தீர்வு பெற்று தரவேண்டும்.இல்லையென்றால் நாம் செத்தாலும் பரவாயில்லை யாழ்ப்பாணத்தை முடக்கி ஒட்டுமொத்த கடல் தொழிலார்களும் இணைந்து சாவதற்கு தயார் என தெரிவித்துள்ளனர்.

மேலும் போராட்டத்தின் போது இலங்கை அரசே உள்ளூர் இழுவைமடி பாடகி தடை செய்,இலங்கை அரசே இந்திய படகுகளை கையக படுத்து போன்ற வாசகங்களை எந்திரவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் ஜனாதிபதிக்கு கோரிக்கைளை அனுப்பி வைக்கும் வகையில்,பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் மீனவர்களால் கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *