அரச அலுவலர்களின் ஓய்வு வயது 65!

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்து, சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

2022 வரவு செலவுத் திட்ட யோசனைக்கமைய இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

எனினும், அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் திட்டத்துக்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம் என்று இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் கு முன்னர் தெரிவித்திருந்தது.

ஓய்வுபெறும் வயது 62 ஆக காணப்பட வேண்டும் என பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தினூடாக குறித்த சங்கம் இதனை தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், அரச உத்தியோகத்தர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தமாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்தச் சுற்றறிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *