
சட்டத்தை மீறி இறக்குமதி செய்யப்பட்டு, தமது பொறுப்பில் உள்ள அனைத்து வாகனங்களையும் விடுவதற்கு இலங்கை சுங்க பிரிவு இணக்கம் தெரிவித்துள்ளது.
அதற்கான வரவு செலவுத்திட்ட யோசனையை செயற்படுத்திய ,பின்னர் வாகனங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்க திணைக்கள பணிப்பாளர் ஜீ. வீ. ரவிபிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் சட்ட விதிகளை மீறி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 262 வாகனங்கள் தேவையான அபராதம் மற்றும் வரிகளை வசூலித்த பின்னர் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்ட விதிகளை மீறி இறக்குமதி செய்யப்பட்ட 800 வாகனங்களும் அபராதம் மற்றும் வரியுடன் விடுவிக்கப்படும் அதேவேளை , சில சந்தர்ப்பங்களில் சட்டமா அதிபரின் ஆலோசனை தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.