அரிசி விலை 300 ஆக உயரும்!

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.

சேதனப் பசளைத் திட்டத்தின் காரணமாக விவசாயிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்கள்.பிரதான நெற்செய்கை பிரதேசங்களிலுள்ள விவசாயிகள் விவசாய நடடிவக்கையிலிருந்து விலகியுள்ளார்கள்.இந்தமுறை பெரும்போக விவசாயத்தில் அதிக விளைச்சலைப் பெறமுடியாது. விவசாயிகள் தங்களின் சுய தேவைக்காக மாத்திரமே விளைச்சலை மேற்கொண்டுள்ளார்கள்.

டொலர் நெருக்கடி காரணமாக மக்கள் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கு தற்போது வரிசையில் நிற்கிறார்கள்.
இந்தநிலையில், எதிர்வரும் மாதம் தொடக்கம் பொதுமக்கள் அரிசியைப் பெற்றுக் கொள்வதற்காகவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கொரோனாத் தாக்கத்தை தொடர்ந்து நாடு அழிவை நோக்கிச் செல்லும். இயற்கைக் காரணிகளால் அந்த அழிவு ஏற்படாது. அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கைத் திட்டத்தால் முழு நாடும் பெரும் அழிவை நோக்கிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *