
செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இருவரை பொலிஸார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர்.
செங்கல்பட்டில் வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கில் இன்று காலை செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே 2 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
இதையடுத்து உத்தரமேரூர் பகுதியில் கைதானவர்களை அழைத்து வந்தனர்.
இதன்போது, தப்ப முயன்ற இருவரும் பொலிஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியதாகவும், தற்காப்புக்காக அங்கிருந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் அவ்விருவரும் உயிரிழந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் 2 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.