
2021 உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தல் பணிகளுக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் ஒன்லைன் ஊடாக கோரியுள்ளது.
ஆசிரியர்கள் www.doenets.lk அல்லது அமைச்சின் மொபைல் அப்ளிகேஷன் DOE மூலம் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
ஒருவர் தனது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தனது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி 20ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.