
பலாங்கொடை பிரதேசத்தில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 1,700 ரூபாவாக உயர்ந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
1,275 ரூபாவாக இருந்த சீமெந்து மூடையின் விலை தற்போது 1,700 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக தாங்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவம் மக்கள் தெரிவிக்கின்றனர்.