
டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கடன் வசதிகளை பெற்றுக்கொள்வது குறித்து ஆராய்ந்து வருவதாகக் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தற்போது 80க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாமல் திணறி வருகிறது.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன,
தற்போது கையிருப்பில் உள்ள மருந்துகள் சில வாரங்களுக்கு போதுமானதாக உள்ளது.
எனினும், மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாது போகும் பட்சத்தில் நாட்டில் மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம்.
இது தொடர்பாக மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றோம். மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான கடன்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவின் கடந்த மாத இந்திய விஜயத்தின் போது, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக இந்திய அரசு உதவிகளை வழங்க இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசின் சம்பள அதிகரிப்பு ஒரு கையால் கொடுத்து மறு கையால் வாங்குவதைப் போன்றது! இம்ரான் மஹ்ரூப்