இந்த அரசாங்கம் அவுட்: புதிய தலைவரை தெரிவு செய்யுங்கள்! வஜிர அபேவர்தன

இந்த அரசால் இனி ஒன்றுமே செய்ய முடியாது, புதிய தலைவரை தெரிவு செய்யுங்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று நம் அனைவருக்கும் நன்கு அறிந்த விடயமாக எரிவாயு வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. மற்றும் உர பிரச்pசனைகள் காணப்படுகின்றன.

இருந்தும் அரசாங்கத்தால் 5ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. எல்லா விடயங்களிலும் பணத்தை வழங்க முடியாது.

அரசாங்கம் 5,000 ரூபா வழங்கிவிட்டதற்காக நம் நாட்டில் டொலர் பற்றாக்குறை தீர போவது இல்லை, பால்மா விலை குறைய போவது இல்லை.

அங்கு மருந்து வாங்க, விவசாயிகளிற்கு உரம் பெற்று தர, குழந்தைகளுக்கு பால்மா பெற்று தர இங்கு டொலர் இல்லை.

இந்த நிலை தொடருமாயின் புதுவருடத்திற்குள் அரிசியின் விலை அதிகரித்து கொண்டே போகும்.

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களை மாற்றினால் தீர்வு கிடைக்காது. சிலர் நினைப்பது அனைவரும் ஒன்று சேர்ந்தால் தீர்வு கிடைக்கும் என்று அவ்வாறு நடக்காது.

எனவே இச்சூழ்நிலையில் சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுப்பது சிறந்த விடயம் ஏன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *