வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையருக்கு விமான நிலையத்தில் தடுப்பூசி!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொரோனாத் தடுப்பூசி மையத்தை விமானப்படை இன்று ஆரம்பித்துள்ளது.

இந்த மையத்தின் ஊடாக வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்கள் பைசர் தடுப்பூசியின் 1வது, 2வது அல்லது 3வது டோஸ்களை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

விமானப்படையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு இந்த தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகளை முன்னெடுத்துள்ளன.

வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் தாம் விரும்பும் வருகை முனையத்தின் ஊடாக இந்த நிலையத்திலிருந்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன தலைமையிலான குழுவினர் இன்று தடுப்பூசி மையத்திற்கு விஜயம் செய்து தடுப்பூசி போடும் பணிகளைக் கண்காணித்துள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தகவல் தொழில்நுட்ப படத்தை கற்கும் வாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *