
நாடாளுமன்ற ஊழியர்களை சோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் வெளியில் கொண்டுச்செல்லப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைவாகவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் நாடாளுமன்ற பொலிஸ் பிரிவுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்து இந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.
முறையான அனுமதியின்றி நாடாளுமன்றத்தில் உணவு தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்ட பாத்திரங்கள் வெளியில் எடுத்துச்செல்லப்படுவதை தடுக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற ஊழியர்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும் போது இவ்வாறு சோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.