
பதவி நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்த பிரதமர், நீங்கள் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக கவலை தெரிவித்துள்ளார்.
எனினும், இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம ஜயந்த நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவே, பிரதமரிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, சுசில் பிரேமஜயந்தவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியதையடுத்து, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.