சீனாவில் இருந்து மற்றுமொரு உர கப்பல் பெப்ரவரியில் இலங்கை வரும்!

சீனாவிலிருந்து மற்றொரு புதிய கரிம உரக்கப்பல் பெப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வக சோதனைகளின் அனுமதியைப் பெற்ற பின்னர், மொத்தம் 8,000 மெட்ரிக் டொன் உரங்கள் நாட்டுக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சீன நிறுவனத்திடம் இருந்து மொத்தமாக 96,000 மெற்றிக் தொன் உரத்தை இலங்கை கொள்வனவு செய்துள்ளதுடன், இவை பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்து தெரிவித்த கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் விஜேகுணவர்தன,
எதிர்வரும் பயிர்ச்செய்கை காலத்திற்கு இந்த உரங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே, இம்மாத இறுதிக்குள் இந்தியாவிலிருந்து 400,000 லீற்றர் திரவ உரத்தை இறக்குமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது.

அதன்படி நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் ஒரு மில்லியன் கோன்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் விஜேகுணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, முன்னதாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய உரக்கப்பல் ஒன்றுக்காக சீனாவைத் தளமாகக் கொண்ட Qingdao Seawin Biotech Group நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை வெள்ளிக்கிழமை (07) செலுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *