இலங்கை வரலாற்றிலே இவ்வாறானதொரு கஷ்டகாலம் இருந்ததில்லை! வாசுதேவ

இலங்கையின் வரலாற்றிலே இவ்வாறானதொரு இக்கட்டான காலகட்டம் நினைவுகூரப்படவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் வரலாற்றில் பிரதமர் என்ற பெயர் அழியாத எழுத்துக்களால் எழுதப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

மிகவும் வறிய, ஒடுக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்து, அவர்களின் நலனுக்காக இந்நாட்டில் பல்வேறு சட்டங்களை இயற்றி, இந்த நாட்டின் தேசிய பாரம்பரியத்தையும், தேசிய சுதந்திரத்தையும் பாதுகாத்து, இந்த நாட்டில் தேசிய உணர்வுகளை எழுப்ப எமக்கு வழங்கிய தலைமைத்துவத்துக்கு மேலதிகமாக அவர் தலைமை தாங்கினார்.

இவை அனைத்திலிருந்தும் அவரது பெயர் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்ட பெயராக வரலாற்றில் இடம்பெறும்.

இந்த இரண்டு வருடங்கள் இந்த நாட்டில் மிகவும் கடினமான காலம்.

இத்தகைய கடினமான காலகட்டம் இந்த நாட்டின் வரலாற்றில் நினைவுகூரப்படவில்லை.

எனவே இந்த ஆண்டு புதிய பயணத்தை தொடங்கவுள்ளோம்.

இந்த ஆண்டு இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு, அவர்கள் எதிர்பார்க்கும் நிவாரணத்தையும் அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றியையும், நமது சாமானிய மக்களுக்கு ஏற்படும் ஒவ்வோர் அழுத்தத்தையும் தணித்து, அவர்கள் விரும்பும் வெற்றியை வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன்- என்றார்.

ஆரிய குளத்தை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் : எந்த ஒரு மதத்தையும் பாதிக்க இடமளிக்க மாட்டேன்! – ஆளுநர் தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *