கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது.
மேலும் , மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும், சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் தேவையற்ற நடமாட்டங்கள், கூடுகைகள், கொண்டாட்டங்களை தவிர்க்குமாறும், மரண சடங்குகளில் மக்கள் கூடுகை அதிகரிக்கின்றமையை உணர முடிவதாகவும், இந்நிலை தொடர்ந்தால் பாரிய ஆபத்தான நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது பரவுகின்ற தொற்றாபத்திலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும், விட்டமின் அடங்கிய பழங்கள் மற்றும் உடன் மரக்கறி வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.
.