கொரோனா வைரஸ் பரவல் நிலைக்கு மத்தியில் சுகாதார வழிமுறைகளை மீறி ஆசன எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற 68 பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் இதனை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மாகாணங்களுக்குள் பயணிக்கும் 18 பேருந்துகளின் வீதி அனுமதிபப்த்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் ஆசன எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகளுடன் மாகாணங்களுக்கு இடையில் பயணித்த 50 பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.