சுகாதார அமைச்சரின் பதவி பறிபோகும் நிலை

இலங்கையில் தீவிரமடைந்து வருகின்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் காணப்படும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தீர்வை காண தவறிய சுகாதார அமைச்சு, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இருந்து கைமாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், சுகாதார அமைச்சு உட்பட சுகாதாரத் துறையை வழிநடத்த பவித்ரா வன்னியாராச்சி தவறியுள்ளார் என அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சுகாதார அமைச்சர் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை மிக விரைவில் நியமிக்க தயாராகி வருவதாக ஜனாதிபதியின் ஊடக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக தற்போதைய அமைச்சரவையில் இருந்து தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், இதன்படி, புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, வெளிவிவகாரம், கல்வி, சுற்றுலா, மின்சக்தி மற்றும் ஊடகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுகளிலும் வெகு விரைவில் பல மாற்றங்கள் ஏற்படுமெனவும் தகவல் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *