வவுனியாவில் 19 வயது இளம் பெண் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை இன்று காலை முதல் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.

இதன்போது அருகில் உள்ள கிணற்றில் இருந்து அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் திலக்சனா (வயது19) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *