வவுனியா-பட்டக்காடு பகுதியை சேர்ந்த இளம் தாயும் அவரது 7 நாட்களேயான குழந்தையும் கொரோனா தொற்றினால் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனர்.
கொரோனோ தொற்றுக்கு இலக்கான குறித்த கர்ப்பிணி பெண் வவுனியா ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
குழந்தையும், தாயும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் , தொடர்ந்தும் வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், பிறந்து 7 நாட்களான சிசுவும், தாயும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.