கல்முனை உடையார் வீதியின் புனரமைப்பு சீராக பூரணப்படுத்தப்படவில்லை! மக்கள் விசனம்

smart

(கல்முனை ஸ்ரீ)
கல்முனைப் பிரதேசத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்பு ‘ஐ’ திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தனியார் கம்பனியொன்றுக்கு வழங்கப்பட்டடு புனரமைக்கப்பட்டு வரும் உடையார் வீதி மற்றும் கடற்கரை வீதி என்பன கார்பட் இடும் நடவடிக்கை நிறைவு பெற்றுள்ள போதும் அதன் வேலைகள் சரியாக பூர்த்தி செய்யப்படாமல் அரையும் குறையுமாக காணப்படுகின்றது.

இதனால் இவ்வீதிகளால் பயனிப்போர் விபத்துக்குள்ளாவதுடன் தமது வாகனங்களை செலுத்த முடியாமல் அவதியுறுகின்றனர் குறிப்பாக உடையார் வீதியையும் வட்டை விதானை வீதியையும் இணைக்கும் வீதி சரியாக செப்பனிட்டு நிறைவு செய்யாத காரணத்தினால் சிறிய ரக வாகனங்களை செலுத்துவோர் வெகு சிரமங்களுக்கு மத்தியில் செல்ல வேண்டிய நிலையேற்பட்டுள்ளது அத்துடன் மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர்
அத்துடன் கடற்கரை வீதியில் வன்னியார் வீதியை இணைக்கும் வீதி ஆரம்பிக்கும் இடத்தில் சரியாக செப்பனிடாத காரணத்திகால் அவ்வீதிக்கு வாகனங்களை செலுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது.

smart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *